Saturday, December 6, 2008

Kannadhasan Karaikudi song lyrics from Anjaathe

Kannadhasan Karaikudi song lyrics from Anjaathe
குழு: வா... வா... 
வா... வா... வா வா வா வா 
வா... வா... வா வா வா வா 

ஆண்: கண்ணதாசன் காரைக்குடி 
பேரச்சொல்லி ஊத்திக்குடி 
குன்னக்குடி மச்சானைப் போல் பாய் போறேன்டா 
கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திக்குடி 
குன்னக்குடி மச்சானைப் போல் பாடப் போறேன்டா 
கண்ணாடிக் கோப்பையில கண்ணை மூடி நீச்சலடி 
ஊறுகாய தொட்டுக்கிட்டா ஓடிப் போகும் காச்சலடி 

குழு: போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான் 
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோஷீயலிசம் தான் 

ஆண்: கண்ணதாசன்... 

ஆண்: பொண்டாட்டி புள்ளைங்க தொல்லைங்க 
இல்லா இடம் இந்த இடம் தானே 
இந்த இடம் இல்லையின்னா சாமிமடம் தானே 
மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே 
சித்தாளு பொண்ணை நெனைச்சு இடிக்கிறாரே 
இயக்குநர் யாரு.. அங்க பாரு.. பொலம்புறாரு 

குழு: நூறு மில்லிய அடிச்சா போதையில்லையே 
நூறத் தாண்டினா நடக்க பாதையில்லையே 

ஆண்: கண்ணதாசன்... 

ஆண்: அண்ணனோ தம்பியோ எல்லாரும் 
இங்கே வந்தா டப்பாங்குத்து தானே 
ஓவரா ஆச்சுதின்னா வெட்டு குத்து தானே 
எங்களுக்கு தண்ணியில கண்டமில்ல 
எங்களுக்கு ஜாதி மதம் ரெண்டுமில்ல 
கட்சிக்கார மச்சி.. என்ன ஆச்சி.. 
வேட்டி அவுந்து போச்சு.. 

குழு: ரோட்டுக் கடையில மனுசன் ஜாலியப் பாரு 
சேட்டுக் கடையில மனைவியின் தாலியப் பாரு 

ஆண்: கண்ணதாசன்...

0 comments:

Post a Comment